இரவு 11 மணி இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு.
” தற்கொலை செய்ய நினைக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் பேசிவிட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன் “.. யாரோ ஒரு பெண்ணின் பட பட பேச்சு. நட்பு ஒன்றின் மூலமாக தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது இந்த பெண்ணுக்கு.
சொல்லிக்கொண்டிருக்கும்போதே படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தேன்.
கொஞ்சம் அமைதி.
Tso Kar :
லடாக் பகுதியை உலகின் சொர்க்கம் என்று பெயரிடலாம். பனி போர்த்தி நிற்கும் மௌன தலைகீழ் V மலைகளின் இடைவெளியில் இருக்கும் ஒரு ஏரி போதும் .. ஒரு நாள் முழுக்க மௌனமாக அமர்ந்து இருக்க. இளைப்பாற. இதம் பெற. இதயம் பெற. 15000 அடியில் ஒரு ஏரி அமைதியாகி, எதிரே தெரிவதை
ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலையில் கண்ட இந்த காட்சி ஏற்படுத்தும் அதிர்வுகள் பல. அவற்றில் பிரதிபலிப்புகள் சொல்லும் பாடங்கள் இங்கு பகிரப்பட வேண்டியவை. பொதுவாக இந்த சாலையில் கண் கொள்ளா காட்சிகள் பல உண்டு.
*
நீரின் அமைதியே பிரதிபலிப்பின் வேர். நீர் அமைதியாய் இல்லை எனில் பிரதிபலிப்பு என்று ஒன்று இருக்கும் ஆனால்
படித்து, வேலைக்கு சேர்ந்து, காசு பார்க்க ஆரம்பித்தாயிற்று. எப்படியாவது ஒரு car வாங்கவேண்டும் .. வாங்கியாயிற்று. எப்படியாவது ஒரு இடம் வாங்கவேண்டும் .. சரி வாங்கியாயிற்று.. எப்படியாவது ஒரு வீடு கட்ட வேண்டும் .. சரி கட்டியாயிற்று. இன்னும் ஒரு இடம் வாங்கி, இன்னும் ஒரு வீடு கட்டி, வாடகைக்கு விட்டு .. சரி செய்தாயிற்று.
பத்மநாதபுரம் அரண்மனை கொஞ்சம் வித்தியாசமானது. வேறு வேறு கோணங்களில் ஒரே காட்சி அழகாக மாறிவிடும். மேற்கூரை அமைப்பும், ஜன்னல் வழி வரும் வெளிச்சமும், நான்கு பக்க ஒடு வரிசைகளுக்கு மத்தியில் தெரியும் செவ்வக இடைவெளியும், மரத்தால் செதுக்கப்பட்ட சிற்பங்களும்… என்று அந்த அரண்மனை வித்தியாச உலகம். புகைப்படம் எடுக்க வேண்டும் எனில், ஒரு நாள் தேவைப்படும்.
காசியின் படிக்கட்டுகள் பல கதைகள் பார்த்தவை. இருந்த உடல்கள், இறந்த உடல்களை தூக்கிக்கொண்டு நகர்வதை அமைதியாக பார்ப்பவை. மகனை பிரிந்த பெற்றோர், அழும் கண்ணீரை அமைதியாக வாங்குபவை. மகளை பறிகொடுத்த அப்பா, சொல்லமுடியாமல் சொல்வதை கேட்பவை. வயதான தன் தாயை கங்கைக்கு பத்திரமாக அழைத்து வந்து, அவள் சொல்லும் வாழ்த்தை கண் மூடி வாங்கும் மகன்
” பள்ளத்தை
தனக்காக்கி
கொள்ளும்
மவுன நீர்
பசுமையை
உயரமாக்கி
பிரதிபலிக்கும்
அழகாய்
இரு மடங்காய் ! ”
தன்னை பிரதிபலிக்கும் நீரில் முகம் பார்த்து, இங்கும் அங்கும் நகர்ந்து .. முகத்தை சரி செய்துகொண்டிருந்தன கரு மேகங்கள். மேகங்கள் எப்போதும் அப்படித்தான். அவை நகர்வதே நீர் நிலைகளை நோக்கி. முகம் அழகு என்று உணர்ந்ததும்
வீசும் காற்றினைக் கேளுங்கள்
அடுத்து எந்த இலை
இந்த மரத்தை விட்டுச் செல்லுமென்று.
– ஜப்பானிய ஹைக்கூ கவிதை ஒன்று.
_______________________________________
இலைகள் சூழ் பெரு மரம் அது. வருடங்களாய் வாழ்வது. ஒரே ஒரு காற்று அந்த பெரு மரத்தின் ஒரு இலையை நோக்கி தன் பேச்சினை ஆரம்பிக்கிறது.
” என்ன .. விட்டு செல்ல
காலைத்தேநீர் அருந்தும் துறவி
பூ மலர்வது போல்
அமைதி !
– ஜப்பானிய ஹைக்கூ
_______________________________________
நீங்கள் கவனித்தது உண்டா ?
காதில் Headphone வைத்தவுடன், மூச்சுக்காற்று அழகாக கேட்க ஆரம்பிக்கும்.
சிறு உடல் அசைவுகளும் அழகாய் உணர முடியும்.
நெட்டி முறிப்பது எல்லாம் backdrop effect music போல கேட்கும்.
கால் நகர்வதின் Rhythm
” அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் ? ”
– அமுதபாரதி
_______________________________________
மிகவும் யோசிக்க வைத்த கவிதை. ஒரே வரி. மூன்று பகுதி. மூன்றாவது பகுதி கொண்டுவருவது ஒரு கேள்வி. சிந்தனை கூட்டில் கல் எரிந்த கேள்வி அது. இனி தேனீக்கள் வசம் எண்ண உலகம் !
ஒருமுறை அஸ்ஸாம் மாநில பள்ளி