கொஞ்சம் யோசிப்போம்.
தெரியாத மாதிரி நடிக்கும் ஆண்கள், இதை படிப்பதில் இருந்தே விலகி விடலாம். படித்த பின் மனதிற்குள் ” என்னை மன்னிக்கவும் “என்று சொன்னால் .. #metoo கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கும்.
1. ” பெண் என்பவள் ஒரு போகப்பொருள் ” என்று அவளை பார்ப்பதில் இருந்தே .. பெண்களின் #metoo வலி ஆரம்பமாகிறது.
அவளுக்கு ஒரு சந்தேகம். ஒரு கேள்வி. ஒரு குழப்பம். ஒரு தெளிவற்ற நிலை. அவனிடம் கேட்பாள். அவன் உலக business க்கும் அரசியலுக்கும் அறிவுரை சொல்பவன். ஆனால் அவளின் நியாயமான குழப்பங்கள் அவனுக்கு எரிச்சல் வரும். அவனால் அவளின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. தடுமாறுவான். அவனுக்கு உலகம் பேச வேண்டும். ஏன் தெரியுமா
அவன் சத்தமாய் பேசிவிட்டு செல்வான். அவள் அமைதியாய் இருப்பாள். அவனின் சத்தம் பக்கத்து வீடுகளுக்கு கேட்கும். அவள் அப்போதும் அமைதியாக இருப்பாள். முகத்தை காட்டிவிட்டு, சத்தமாய் பேசிவிட்டு வெளியேறுவான் அவன். அவள் இன்னமும் மௌனமாக இருப்பாள். கதவை மூடிவிட்டு யாருமற்ற அந்த வீட்டில் மௌனமாக அழுவாள். ஆம் .. அங்கும் அவளுக்கு சத்தம் வந்துவிட கூடாது
“உங்களின் திறமையை பாராட்டுகிறோம் ” கேட்கும் அவனுக்கு இருப்பு கொள்ளாது. அவளை அல்லவா பாராட்டுகிறார்கள் !? அவள் வாங்கும் கோப்பைகளுக்குள் அவன் எப்போதுமே விழுந்துவிடுவான். எழ சிரமப்படுவான். அவளை அடையும் பாராட்டுக்களை பொதுவாய் ‘ கடு கடு ‘ முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பான். போதாதற்கு … கொஞ்சம் Plastic smile வேறு அந்த எள்ளும் கொள்ளும் வெடிக்கும்
“இரண்டாவது வேண்டும் ” – அவள் வேண்டாம் என்று சொல்லும்போதும் அவனின் அடம் வித்தியாசமானது. அவளுக்கு உடல் பயம். முதல் குழந்தை சந்தோஷம் எனினும், உடல் படுத்திய பாடு இன்னும் நினைவை விட்டு அகல்வதற்குள் அவனுக்கு அவசரம். அவளுக்கு உடல் பழைய நிதானத்திற்கு வேண்டும். அவனுக்கு இன்னொரு குழந்தை வேண்டும். முதிர்ந்த என்று சொல்லிக்கொள்ளும் அவனின்
” நீ உள்ளே போ. நாங்க பேசும்போது உனக்கு இங்க என்ன வேலை ” என்று அவன் சொன்னவுடன் அவளுக்கு கோபம் உச்சிக்கு மேல் எகிறும். அங்கேயே அவனை அறைய தோன்றும். ‘என்னை ஏன் உள்ளே போகச் சொல்கிறாய்‘ என்று இரண்டாவது அறையையும் விடத்தோன்றும். அவனேதான் சில மாதங்களுக்கு முன் ‘இது உன் குடும்பம்‘ என்று
” ஏன் இதை என்னிடம் இருந்து மறைச்சீங்க ? ” – அவளின் இந்த வீடு, குழந்தைகள் அதிரும் கேள்விக்கு அவன் எங்கோ பார்த்துக்கொண்டிருப்பான். பதில் சொல்ல மாட்டான். பதில் சொல்ல முடியாமல் அல்ல. ஏன் உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்கிற வெளி தெரியும் ஆணவத்தில் !
அது ஏன் என்று தெரியவில்லை. வெளியில்
” அம்மா வீட்டுக்கு போகணும் ” அவளின் பேச்சு அவன் காதில் விழாது. அல்லது விழுந்தும் விழாதது போல் நடிப்பான். ‘என்ன கேட்கலையா ?’ என்ற அவளின் கோப கேள்விக்கு முறைப்பை பதிலாக்குவான். ‘எத்தனை நாள்‘என்ற கேள்வியை அவளை பார்க்காமல் எழுப்புவான். அவளும் போயாக வேண்டுமே என்ற எண்ணத்தில் ‘ நான்கு நாள் ‘ என்று
” சும்மா ‘தொன தொன‘ன்னு … சும்மா இருக்க முடியாதா உன்னால ” அவனின் இந்த வார்த்தைகள் அவளுக்கு புரிவதில்லை. அவன் பார்வையில் வெளியுலகம் தெரியாதவள் தானே அவள் !
அதென்ன ‘தொன தொன ‘ ? …. எப்போதும் அவனுக்கு தொழில் தான் முக்கியம். தொழிலின் ஏற்றம், இறக்கம், லாபம், நஷ்டம், வரவு,
உன் கோபங்கள் நியாயமானவை. பிறந்து வளர்ந்து படித்து … உன் ஆசையை கையில் எடுக்கும் சரியான வேளையில், உன்னை திருமணம், குழந்தை, அம்மா, பொறுப்பு, தியாகம், நான்கு சுவர், வீடு, கணவனே கண் கண்ட தெய்வம், அடங்கு … என்ற வார்த்தைகளில் உன் வாழ்க்கை முடிந்து …. கடைசியில் மகனும், மகளும் … கவனிக்காமல் போன