” அம்மா வீட்டுக்கு போகணும் ” அவளின் பேச்சு அவன் காதில் விழாது. அல்லது விழுந்தும் விழாதது போல் நடிப்பான். ‘என்ன கேட்கலையா ?’ என்ற அவளின் கோப கேள்விக்கு முறைப்பை பதிலாக்குவான். ‘எத்தனை நாள்‘என்ற கேள்வியை அவளை பார்க்காமல் எழுப்புவான். அவளும் போயாக வேண்டுமே என்ற எண்ணத்தில் ‘ நான்கு நாள் ‘ என்று
” சும்மா ‘தொன தொன‘ன்னு … சும்மா இருக்க முடியாதா உன்னால ” அவனின் இந்த வார்த்தைகள் அவளுக்கு புரிவதில்லை. அவன் பார்வையில் வெளியுலகம் தெரியாதவள் தானே அவள் !
அதென்ன ‘தொன தொன ‘ ? …. எப்போதும் அவனுக்கு தொழில் தான் முக்கியம். தொழிலின் ஏற்றம், இறக்கம், லாபம், நஷ்டம், வரவு,
உன் கோபங்கள் நியாயமானவை. பிறந்து வளர்ந்து படித்து … உன் ஆசையை கையில் எடுக்கும் சரியான வேளையில், உன்னை திருமணம், குழந்தை, அம்மா, பொறுப்பு, தியாகம், நான்கு சுவர், வீடு, கணவனே கண் கண்ட தெய்வம், அடங்கு … என்ற வார்த்தைகளில் உன் வாழ்க்கை முடிந்து …. கடைசியில் மகனும், மகளும் … கவனிக்காமல் போன
“ஒரு முன்னூறு ரூபாய் வேண்டும் “
என்று கேட்கும்போது தன்மானம் துடிக்கும். வீட்டிற்கு தான் என்றாலும் ஏன் கேட்டு வாங்க வேண்டும் என்று உள்ளே கோபம் கொப்புளிக்கும். அதே நேரத்தில் அவன் ஒரு கேள்வி கேட்பான் ‘ எதற்கு ? ‘. தன்மானம் இன்னும் நொறுங்கும். கோபம் இப்போது வெளியே வரும். ‘ ஏன் என்
ஆம். உன்னை சுற்றி ஒரு கருப்பு பூனை வலம் வருகிறது. அதற்கு உன்னைப் பார்க்க வேண்டும். உன்னை என்றால் உன்னை அல்ல. உன் flesh ஐ – தோலை. உன் மறைக்கப்பட்ட பகுதிகளை. சிறு இடைவெளிகளில் தெரியும் உன் அங்கங்களை. நீ மறைத்த பின்னும் ‘அநேகமாக இப்படித்தான் இருக்கும் ‘ என்ற கற்பனையோடு உன்னை தொடரும்





