சில நினைவுகள் எப்போதும் நமக்கருகில், தலையணை மந்திரம் போல் இருப்பை விவரித்துக்கொண்டே இருக்கும். அந்த நினைவுகளின் வேர், உடல் முழுக்க படர்வது, போர்வை தேவைப்படா அணைப்பு. நெஞ்சுக்கூட்டின், தேக்கப்பட்ட, குவிக்கப்பட்ட இளஞ்சூடு.
ஏன் நினைவுகள் நம்மை, மீண்டும் மீண்டும் வந்தடைகின்றன ? அவை எதிர்பார்ப்பது என்ன ? நினைவுகள் நம்மை அடையும் நேரம் பெரும்பாலும் தனிமை
நிலம் முடிவடையும்போது, நீர் துவங்கும். நீர் முடிவடையும்போது நிலம் துவங்கும். துவங்குதலே இங்கு முக்கியம். முடிவடைதல் அல்ல.
பொதுவாக Negativity என்று ஒரு வார்த்தை முடிவடைதலுடன் மட்டுமே தொடர்பாகிறது. ” எல்லாம் முடிஞ்சு போச்சு ” என்பது எதையோ இழப்பதையும், ” அதெல்லாம் ஒரு காலம் ” என்பது கைவிட்டு போன நிலையையும் குறிப்பதாக இருக்கிறது.
பெரும்பாலான பயணங்கள் ஆரம்பித்தோம் முடித்தோம் என்றுதான். ஆரம்பிக்கும்போதே, முடிக்கும் இடம் எப்போ வரும் என்ற சிந்தனையுடன் ஆரம்பிக்கப்படும் பயணங்கள் பயணங்களே அல்ல. அவை இடமாற்றங்கள்.
கிராமத்து ஆளற்ற இருவழி ஒற்றை சாலை, பசுமை மரங்களால் முழுவதும் மூடப்பட்ட தூரத்து வட்டம், கண்ணாடியில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளி… இரண்டும் என்னை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்தன. வாகனம்
பயிற்சி வகுப்பு முடித்து விட்டு, நேற்று இரவு திரும்பி வந்துகொண்டிருந்த போது, ( ஞாயிறு இரவு 10 மணி அளவில் ), tyre Puncture. சனிக்கிழமை நீண்ட பயணம், ஞாயிறு முழு நாள் பயிற்சி என்று இருந்ததில், உடல் அசதியோடு ‘ போய் படுக்கலாமே ‘ என்று சொல்லிக்கொண்டிருந்தது. எந்தக் கடையும் இல்லை என்பதால், என்ன
சாலையோர பயணங்களில், ஒரு break தேவைப்படும். Monotonous என்று சொல்லப்படுகிற ஒரு வித இயலில் இருந்து வெளிவரவே அந்த break.
CCD பயணங்களில் ஒரு எழுதப்படா நிறுத்தம் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. ” காபி அங்கே நல்லா இருக்காதே ? விலையும் அதிகம் ? ” என்று சொல்பவர்களுக்கு .. CCD என்பது என்னை பொறுத்தவரை ஒரு
கள்ளக்குறிச்சியில், வீட்டில் இருந்து ஆரம்பித்த பயணம். சேலத்தில் வியாபார நிமித்தம் பேசி முடித்துவிட்டு, சென்னை கிளம்ப எத்தனித்த போது .. இரண்டு options கையில். ஒன்று சேலம் கள்ளக்குறிச்சி சென்னை வழி. இன்னொன்று சேலம் கிருஷ்ணகிரி சென்னை வழி. நேரம் கருதி, இரண்டாவதை தேர்ந்தெடுத்து பயணத்தை ஆரம்பித்தேன். அதிலும் கிருஷ்ணகிரி செல்வதை தவிர்த்து, தொப்பூரில் பிரிந்து
அந்த சிவப்பு போக்ஸ்வகன் போலோ கார், மெதுவாக வேகம் குறைந்து, இடப்பக்கம் மஞ்சள் indicator காண்பித்து, வெள்ளை கோட்டுக்குள் மென்மையாக நின்றது. ஜன்னல் கண்ணாடி கீழிறங்கி, கதவு திறந்து, black leather shoe அணிந்த ஒரு கால் வெளிவந்து, இன்னொரு காலையும் வெளி இழுத்தது. இறங்கிய பெண் சிரித்தாள். சராசரி உயரம். சிரித்த முகம். Black
தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து நான் விலகி வந்து நீண்ட நாட்கள் ஆயிற்று. Accelerator ல் கால் வைத்தால் சென்று கொண்டே இருக்கலாம் என்கிற ஒரு வசதியை தவிர தேசிய நெடுஞ்சாலைகள் ( NH ) எனக்கொன்றும் பெரியதாக எதுவும் செய்ததில்லை. மூன்று மணி நேரத்தில் சென்று விடலாம் என்கிற ஒரு தூரம், கிராம / சிறு
பொதுவாக ‘ எப்போதும் செல்லும் ‘ பாதைகளை தவிர்த்துவிட்டு புதிய பாதைகளை நான் தேர்ந்தெடுத்து செல்வதுண்டு. புதிய பாதைகளில் நிரந்தரமாய் இருக்கும் இருப்பு ‘தேடல்’. தேடுதல் என்பது எதற்காக ? எதை நோக்கி ? எதுவுமற்றா? என்ற கேள்விகளை தவிர்த்து விட்டு யோசித்தால்.. பொதுவாக வரும் பதில் மனிதர்களின் அருகாமை. தேசிய நெடுஞ்சாலைகளில் நாம் தொலைத்தது
புரிதல் என்பது உனக்கும் எனக்குமானது அல்ல. நமக்கும் நமக்குமானது. மீண்டும் சொல்கிறேன். நமக்கும் நமக்குமானது. உன் எதிர்காலத்திற்க்கும் என் எதிர்காலத்திற்குமானது அல்ல. நம் எதிர்காலத்திற்குமானது. தனியை பொதுவில் தொலைத்து வாழ்பவர்கள் நாம்.
நான், நீ வரும் இடங்களில் எல்லாம் ‘நாம்’ தொலைவது தான் இந்த உலகத்தின் மிகப்பெரும் ஆச்சர்யம். நான், நீ அழகுதான். அது நாமாக,